ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் 504 திருவிளக்கு பூஜை

திருவாடானை  சிநேகவல்லி அம்பாள் சமேத  ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும்  கிராம பூஜாரிகள் சங்கம் சார்பில்  ஞாயிற்று கிழமை மாலை  504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  

திருவாடானை  சிநேகவல்லி அம்பாள் சமேத  ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும்  கிராம பூஜாரிகள் சங்கம் சார்பில்  ஞாயிற்று கிழமை மாலை  504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  
   பூஜையில் திருவாடானை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
அமைப்பின்  நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் விழாவைத் தொடக்கி வைத்தார். சரக பொறுப்பாளர சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
         வைரமணி குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கிராம பூசாரிகள் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், தென் மண்டல அமைப்பாளர் கோதாவரி, மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் சங்க அமைப்பாளர் அன்புமாறன், ஒன்றிய இணை அமைப்பாளர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com