குடும்பத் தகராறில் தாக்குதல்: 3 பேர் கைது

பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை சகோதரர்கள் இடையே ஏற்பட்ட இடத்தகராறில் 2 பேர் காயமுற்றனர். 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை சகோதரர்கள் இடையே ஏற்பட்ட இடத்தகராறில் 2 பேர் காயமுற்றனர். 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 பரமக்குடி ஒன்றியம் மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டியப்பன் மகன் பாலகிருஷ்ணன்(63).  இவருக்கும் அவரது தம்பி நாகராஜன்(58) என்பவருக்கும் சொத்துப் பிரச்னை  இருந்து வந்துள்ளது.
 இதில் சம்பவத்தன்று வாய்த் தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் கம்பு கற்களால் தாக்கிக் கொண்டனர்.  இதில் பாலகிருஷ்ணன், அவரது மனைவி உடையம்மாள் ஆகியோரை நாகராஜன், அவரது மனைவி சாந்தி(48),  மகன் விமல்(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமுற்ற பாலகிருஷ்ணன், உடையம்மாள் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில்  சார்பு- ஆய்வாளர் முருகானந்தம் வழக்குப் பதிந்து நாகராஜன், சாந்தி, விமல் ஆகியோரை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com