பெரியபட்டினத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா முன்பா ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா முன்பா ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலின் ஆலிம் ஜாபர் துவக்கி வைத்து, ரமலான் மாதத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில், பெரியபட்டினத்தைச் சுற்றியுள்ள அழகன்குளம், பனைக்குளம், கீழக்கரை, பெருங்குளம், வேதாளை, ரெகுநாதபுரம், வண்ணான்குண்டு மற்றும் திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிகள் கலந்துகொண்டனர்.
   இதில், பெரியபட்டிணம் தர்ஹாவைச் சேர்ந்த இஸ்மாயில் ஆலிம்சா பேசி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை, பெரியபட்டினம் கிராமப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com