தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கமுதியில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் சாலை பராமரிப்பு பணிகளை தனியார் மயப்படுத்தும் கொள்கை முடிவை கைவிடுதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிடுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 10-ஆம் தேதி முதல் 23 வரை மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
இதன்படி கமுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்துக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் ஆர்.தமிழ் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் த.கோவிந்தன், செய்யது யூசூப்கான், மாவட்ட துணைத் தலைவர் கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.