உலக தண்ணீர் தினம்: தொண்டி பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி

உலக தண்ணீர் தினத்தையொட்டி  தொண்டி பேரூராட்சியில் புதன்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி  தொண்டி பேரூராட்சியில் புதன்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமை வகித்தார். பேரூராட்சி அலுவலர் குணசேகரி முன்னிலை வகித்தார். இதில்,கடும் வறட்சி நிலவுவதால் கண்மாய் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. பெரும்பாலான பகுதியில் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.
 எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com