கமுதி மலட்டாறு திட்ட அலுவலகம் சேதம்

கமுதி அருகே புதுக்கோட்டையில் மலட்டாறு திட்ட அலுவலகக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து உள்ளது.

கமுதி அருகே புதுக்கோட்டையில் மலட்டாறு திட்ட அலுவலகக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து உள்ளது.
கமுதி-சாயல்குடி சாலையில் உள்ள புதுக்கோட்டையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மலட்டாறு அணைக் கட்டும் திட்டத்தின் கீழ், இந்த மலட்டாறு துணை அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் மின் இணைப்பு போன்ற அனைத்து வசதிகளுடன்  கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமால் இருந்த நிலையில், இந்த அலுவலகத்தை சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தி அலுவலகத்தை சேதப்படுத்தி வருவதாக பொது மக்கள் கவலை தெறிவித்தனர். மலட்டாறு துணை அலுவலகம் பயன்பாட்டிற்கு வரமாலே சேதமடைந்துள்ளதால், அரசுப் பணம் ரூ.8 லட்சம் வீனடிக்கபட்டுள்ளது. இது குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: அதிகாரிகள் முறையாக செயல்படாததால் மலட்டாறு திட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு பணம் வீணடிக்கபட்டு உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com