ராமநாதபுரத்தில் மே 24 இல் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 24 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 24 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்படுகிறது.
 இம்மாதம் 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம்,
மார்பளவு புகைப்படம் 5, அனைத்து வகையான சான்றுகளின் நகல்கள் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.
   இந்த வேலைவாய்ப்புச் சந்தையின் மூலம் பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகள் ரத்து செய்யப்படாது எனவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com