தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஏசியா-பசுபிக் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தாய்லாந்தில் மே 17,18,19 தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தியா உள்பட 6 நாடுகளிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து போட்டியில் பங்கேற்ற 30 பேரில், ராமநாதபுரம் தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி மாணவி காமாட்சியும் ஒருவர். இவர், இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் இரண்டிலுமே 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.