கமுதி சந்தைக்கடை மற்றும் கோட்டைமேட்டில் காவல் உதவி மையங்கள் 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன. தற்போது இவை பூட்டிய நிலையிலேயே உள்ளன. சந்தைக்கடை பகுதியில் உள்ள உதவி காவல் மையம் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கூடும் சந்தைக்கடை பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கமுதி காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வருவதற்குள் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் உள்ளது. காவலர்கள் பற்றாக்குறையால் இம்மையங்கள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறப். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலையிட்டு காவல் உதவி மையங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.