பருத்திச் செடியில் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர் பகுதியில் பருவ மழை பெய்யாததால் பருத்திச் செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் பருத்திச் செடியில் நோய் தடுப்பு முறைகள் குறித்து முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன் ஆலோசனை வழங்கினார். முகாமில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பருத்தி நோய் கட்டுப்பாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் அவர்களிடம் ஆலோசனைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.