இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ளராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு மூன்றாவது முறையாகநீதிமன்ற காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்.17-ஆம் தேதி மீன்பிடிக்கச்செ

இலங்கை சிறையில் உள்ளராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு மூன்றாவது முறையாகநீதிமன்ற காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்.17-ஆம் தேதி மீன்பிடிக்கச்சென்றபோது 2படகுகளுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகை பறிமுதல் செய்த கடற்படையினர் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் 8 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
6 பேருக்கும் நவ.23ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து காவல்நீட்டிப்பு செய்யப்பட்டு வருவது மீனவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅவர்கள்கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com