கமுதி அருகேஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீதுவேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
கமுதி அருகேஉள்ளராமசாமிபட்டியைச்சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் விஜயராமன் (50).விவசாயியான இவர் ராமசாமிபட்டியிலிருந்து கிளாமரத்திற்கு இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றுள்ளார்.அப்போது உச்சிப்புளியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து விஜயராமன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதனை அடுத்து விஜயராமன் மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கமுதி போலீஸார், வழக்குப்பதிந்து உச்சிபுளியை அடுத்துள்ள ரெட்டையூரணியைச்சேர்ந்த வேன் ஓட்டுநர் பழனிச்சாமியை கைது செய்தனர்.