திருவாடானை அருகே மங்கலக்குடி ஹோலி கிரசண்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மங்கலக்குடி ஜமாத் தலைவர் அப்துல் நசீர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி சவுரிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் எலியாஸ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோகோ, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகி, ஜமாத் தலைவர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். துணை முதல்வர் அருள்ஜோதி நன்றி தெரிவித்தார்.