தொண்டி அருகே இரு தரப்பினர் மோதல்: 6 பேர் மீது வழக்கு

திருவாடானை அருகே பி .வி. பட்டணத்தில் புதன்கிழமை இரு தரப்பினர் மோதிக் கொண்டதை அடுத்து, போலீஸார்  6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவாடானை அருகே பி .வி. பட்டணத்தில் புதன்கிழமை இரு தரப்பினர் மோதிக் கொண்டதை அடுத்து, போலீஸார்  6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
        பி.வி.பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (35) மற்றும் சிவா (34) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில்,  புதன்கிழமை இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
     இது குறித்து சிவா அளித்த புகாரின்பேரில்,  முனியசாமி, ரமேஷ் (24), விக்னேஸ்வரன் (27) ஆகிய 3 பேர் மீதும், அதேபோல் முனியசாமி அளித்த புகாரின்பேரில் சிவா, பூபாலன் (34), மலுங்கு சாகிபு (29) ஆகிய 3 பேர் மீதும் என, தொண்டி போலீஸார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com