மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில், ராமநாதபுரம் வேலுமாணிக்கம் பள்ளி மாணவர் கா. நித்திஷ்குமார் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து அப்பள்ளி முதல்வர் பரிமளா டி. ஆண்டனி வியாழக்கிழமை கூறியது: ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் கா. நித்திஷ்குமார் (16). இவர், பள்ளிக் கல்வித் துறை சார்பில், அண்மையில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவரை பள்ளியின் தாளாளர் வே. மனோகரன், வேலுமாணிக்கம் அறக்கட்டளை உறுப்பினர்கள் வே. ஜெகன்னாதன், வே. கதிரேசன் ஆகியோரும் பாராட்டினர். மேலும், உடற்கல்வி இயக்குநர்கள் ஆரோக்கிய சேவியர், மாரிமுத்து, மரகதப்பிரியா ஆகியோரையும் பள்ளித் தாளாளர் பாராட்டியதாகத் தெரிவித்தார்.