ராமநாதபுரத்தில் 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து 2-வது நாளாக ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.சேகர் தலைமை வகித்தார். ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். முருகேசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com