தனுஷ்கோடி, கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. ராமேசுவரம் வட்டாட்சியர் கணேசன், துணை வட்டாட்சியர் அப்துல்ஜப்பார், காவல் ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட காவல்துறையினர், ராமேசுவரம் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.