ஆர். எஸ். மங்கலம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் போதுமான அளவு நெல் விதை இருப்பு உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் மோகன்ராஜ் தெரிவித்தார்.
நெல் ரகங்கள் போதுமான அளவு இருப்பு. மேலும் விதை நேர்த்தி, அúஸாஸ்பைரில்லம், பாஸ்டோபேரியம் பன்ற உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. நெல் பயிரில் விதை விதைப்பான் கருவி வரிசை விதைப்பின் மூலம் அதிக மகசூல் பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் கேட்டுகொண்டார். பிரத மந்திரி நீர் பாசன திட்டத்தின் கீழ் பருத்தி ,பயறு,எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணீர் பாசன கருவிகளான தெளிப்பு நீர் கருவி மற்றும் மழைதூவான் ஆகியவைகளை மானிய திட்டத்தின் கீழ் பெற்று கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் மோகன் ராஜ் தெரிவித்தார்.