திருவாடானை தீயணைப்பு மீட்புப் படை அலுவலகத்தில் தீ தொண்டு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஏப். 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் அனுசரிக்கப்படும் இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது வீர மரணமடைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தினர்.
இதில், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன், தீயணைப்பு வீரர்கள் நிலைய வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.