கமுதி செட்டியார் பஜார் பள்ளிவாசல் சாலையில் ஒன்றிய பாஜக அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு கமுதி ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.ஆறுமுகம், துணைத்தலைவர் முருகேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், "முத்ரா" கடன் திட்டத்தை வங்கிகள் சரியான முறையில் நடைமுறைபடுத்தவும், பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்தும், கமுதி நகர போக்குவரத்து நெரிசலை அகற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி தலைவர் கணபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், இந்து முன்னணி வழிவிட்டான் ஒன்றிய நிர்வாகிகள் அழகுமலை, வரதராஜன், கணேசன், இளைஞரணி ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.