பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரமக்குடி உபமின் நிலையத்தில்சனிக்கிழமை மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை பரமக்குடி, எமனேசுவரம், கமுதக்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.