மதுபானத்தில் விஷம் கலந்து குடித்த இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே இளைஞர் ஒருவர், மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து வியாழக்கிழமை உயிரிழந்தார். 

முதுகுளத்தூர் அருகே இளைஞர் ஒருவர், மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து வியாழக்கிழமை உயிரிழந்தார். 
     ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ராமர் (30). இவர், உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த ராமர், மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை ராமர் உயிரிழந்தார். 
    இது குறித்து அவரது தாய் மாணிக்கம், பேரையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com