ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு பண்டகசாலை மூலம் செயல்பட்டு வரும் 32 ரேஷன் கடைகளில் 24,700 குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு பண்டக சாலை மூலம் செயல்படும் 32 ரேசன் கடைகளில் 24,700 ரேசன் கடைகளில் தமிழக அரசின் விலையில்ல பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ராமேசுவரம், தங்கச்சிமடம் ,பாம்பன் மற்றும் மண்டபம் அகதிகள் முகாம் போன்ற இடங்கில் பொங்கல் பொருள்கள் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி பருப்பு, ஏலக்காய் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமேசுவரம் வட்டாட்சியர் கணபதிகாந்தம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் லலிதா மற்றும் ராம்கோ பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.