அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் தேவர் பற்றிய பாடத்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, கமுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் தேவர் பற்றிய பாடத்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, கமுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
கமுதி பேருந்து நிலையம் பெருமாள்கோயில் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய இளைஞரணி செயலர் பூவலிங்கம்மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சண்முகவேல், இளைஞரணி பொது செயலர் எஸ்.கே.தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம் கண்டன உரையாற்றினார். இதில், மாநில தொழிற்சங்கத் தலைவர் நல்லமுத்து,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்முத்துராமலிங்கம்,  இளைஞரணித் தலைவர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com