பரமக்குடி ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் நீனு இட்டியாரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாடுகள் குறித்து ரயில் பயணிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரயில் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், குடிநீர், ஜெனரேட்டர் வசதி, பயணிகளுக்கான இருக்கை மற்றும் மேற்கூரை, இருப்புப் பாதையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்கள் குறித்தும் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உரிய முறையில் செய்துதரவும் நிலைய அதிகாரிக்கு கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.