முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இப்போட்டிகளை அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.தர்மர் தொடக்கி வைத்தார். போட்டிக்கு சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராயர் தலைமை வகித்தார்.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முத்துராமலிங்கம், மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் வேதமலை, ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை முதுகுளத்தூர் வட்டார உடற்கல்வி ஆசிரியர்கள் கோகிலா,வடிவேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் 11,14,17,19 வயதிற்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து மொத்தம் 42 பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சதுரங்கப்போட்டிக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் முகம்மது உசேன், சரவணன்,ஜேக்கப் ஆகியோர் பணியாற்றினர். போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.