கமுதி அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வெள்ளிக்கிழமை விவசாயி பலியானர்.
கமுதி அருகே டி.எம்.கோட்டையை சேர்ந்த விவசாயி சோலைராஜ் (68). இவர் தனது உறவினருமான இருளப்பராஜ் உடன் இருசக்கர வாகனத்தில் பெருநாழி சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது சாயல்குடி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த பயணிகள் ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி சோலைராஜ் உயிரிழந்தார்.
மற்றொரு விவசாயி இருளப்பராஜ் காயமடைந்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பெருநாழி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.