ராமேசுவரத்தில் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயிலில் 43 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கரையில் உள்ள இக் கோயிலில் 43 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா காப்புக் கட்டுடன் தொடங்கியது. நாள் தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் கலந்துகொண்டனர்.