சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் விளையாட்டுப் பயிற்சி முகாம்

சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் முதல் விளையாட்டுப் பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது என சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும்

சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் முதல் விளையாட்டுப் பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது என சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச.ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற தடகளப் போட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை (ஏப். 22) முதல் ஏப். 28 வரை இருப்பிடமற்ற பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், தேவகோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேவகோட்டை தே.பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாமிலும், சிவகங்கை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிவகங்கை- மானாமதுரை சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிலும் கலந்து கொள்ளலாம். இவை தவிர, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கோடை கால பயிற்சி முகாம் திங்கள்கிழமை (ஏப். 24) தொடங்கி மே 13 வரை காலை 6.30 முதல் 8.30 வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, கைப்பந்து ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703503 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com