சிவகங்கையில் நாளை மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், ஏப்ரல் 24 இல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிற்பகல் 1 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில், திருப்பூரில் நிறுவனம் கலந்துகொண்டு 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும் பயின்ற பெண்களை மட்டும் தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலையில் சேர தகுதி குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும், அதிகபட்சமாக 45 வயதாகவும் இருத்தல் வேண்டும். தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 5000 வரை வழங்கப்படும். மேலும், உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. மேற்கண்ட தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com