காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் காளிச்சரண் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் கவிதா நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினார். பள்ளியின் மூத்த தமிழாசிரியர் மெய்யாண்டவர் சிறப்புரையாற்றினார்.
விழாவையொட்டி, பள்ளியின் மாணவ, மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர். பள்ளியின் மாணவர் ஜொகானன் வரவேற்றுப்பேசினார். முடிவில் பள்ளியின் மாணவி கீர்த்தனாஸ்ரீ நன்றி கூறினார்.