சிவகங்கை நேரு பஜாரில் உள்ள செல்வகணபதி கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மூலவருக்கு தைலம்,மஞ்சள்,திருமஞ்சனம்,பால்,தயிர்,சந்தனம்,இளநீர்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து,கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள விழா திடலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில்,சிவகங்கை நேரு பஜார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு கோயில் பிரசாதமாக திருமாங்கல்ய தாம்பூலம் வழங்கப்பட்டது.