சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (டிச.8) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் க. லதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில், அந்தந்த வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா, வருமானச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சமூக நலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்படும்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் பாகனேரி, காரைக்குடி வட்டம் முத்துப்பட்டி, திருப்புவனம் வட்டம் திருப்புவனம் புதூர், தேவகோட்டை வட்டம் பொன்னத்தி, மானாமதுரை வட்டம் செங்கோட்டை, திருப்பத்தூர் வட்டம் காலாங்கரைப்பட்டி, காளையார்கோவில் வட்டம் பில்லித்தி, சிங்கம்புணரி வட்டம் திட்டசிவல்பட்டி.