இன்று நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் டிச.9 இல் (சனிக்கிழமை) நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் டிச.9 இல் (சனிக்கிழமை) நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்ட செய்தி விவரம்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள்,கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமில் அந்தந்த வட்டத்திற்குள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான புகார்களை மனு மூலமாக தெரிவிக்கலாம்.அவை விசாரனை செய்து தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்: சிவகங்கை வட்டம் இடையமேலூர், மானாமதுரை வட்டம் கால்பிரவு,இளையான்குடி வட்டம் கண்ணமங்களம்,காரைக்குடி வட்டம் நங்கபட்டி, தேவகோட்டை வட்டம் உஞ்சனை,திருப்பத்தூர் வட்டம் தென்கரை,திருப்புவனம் வட்டம் கருங்குளம், காளையார்கோவில் வட்டம் நாட்டரசன்கோட்டை,சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com