சிவகங்கை அரசு கல்லூரி முன்பு சாலை மறியல்

உரிய மதிப்பெண்கள் இருந்தும் அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்காததால் மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிய மதிப்பெண்கள் இருந்தும் அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்காததால் மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
       சிவகங்கை மானாமதுரை சாலையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி  உள்ளது.இந்த கல்லூரியில் 2017ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய மதிப்பெண் இருந்தும் இடம் கிடைக்கவில்லை எனக் கூறி  கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் கல்லூரி முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
       இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர் அழகுசாமி(பொறுப்பு), வட்டாட்சியர்  நாகநாதன் மற்றும்  நகர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.   தற்போது கல்லூரி சேர்க்கைகான இடங்கள் முழுவதும் நிரப்பட்டு விட்டதால்  பொறியியல் கலந்தாய்வுக்கு செல்லும்  மாணவர்களால் காலியாகும்  இடங்ளுக்கு இந்த மாணவர்களுக்கு இடமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்களும்,பெற்றோர்களும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com