மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் திருமுற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இசைக்கருவிகளுடன் இறைவன் புகழ்பாடும் பாடல்களைப் பாடி திருமுற்றோதல் நடத்தினர்.