தேவகோட்டைக்கு குபேரர் ரதம் செவ்வாய்க்கிழமை வந்தது.
சென்னை வண்டலூர் ரத்னமங்கலத்தில் ஸ்ரீ லெட்சுமி குபேரர் சன்னதி உள்ளது. அங்கிருந்து ஸ்ரீ குபேர உற்சவ மூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் தேவகோட்டை வந்தது.
இதில் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு குபேரரை தரிசித்தனர்.
கலந்துகொண்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெய்யப்ப செட்டியார் செய்திருந்தார். இலக்கிய மேகம் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சென்னை ரத்ன மங்கலம் கோயில் நிர்வாகி குபேர கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.