தேவகோட்டை நகராட்சிப் பகுதியில் குரங்குத் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேவகோட்டையில் காந்தி வீதி, முளைக்கொட்டு தெரு, நித்தியகல்யாணி புரம், கிருஷ்ணராஜபுரம் போன் பகுதிகளில் குரங்குகள் அதிகமாக உள்ளன.
தேவகோட்டை புதுத்தெரு பகுதியில் வசித்து வரும் ஓட்டுநர் முகம்மது வீட்டின் பின்பகுதியில் திங்கள்கிழமை புகுந்த குரங்குகள் கடித்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனவே நகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.