திருப்பத்தூர் வட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செவ்வாய்கிழமை பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டி வழங்கப்பட்டது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2017 - 18 ன் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் விளை பொருள்களை வைத்து விற்பனை செய்வதற்கான நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டி 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அழகுமலை தலைமை வகித்து பயனாளிகளுக்கு காசோலையை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் துணை தோட்டக்கலை அலுவலர் காமாட்சி செய்திருந்தார்.