சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 19 முதல் வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்தி: வங்கித் துறைகளில் அறிவிக்கப்படும் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 19 (திங்கள்கிழமை) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் சிவகங்கை தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.