சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஜெயமங்கலம் விலக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
ஜெயமங்கலம் அருகே பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் (60) என்ற விவசாயி நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விபத்துக்குக் காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.