காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில் நுட்பவியல் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் சார்பில் ஆரோக்கியமான பெண்கள் -2017 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ். ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். துறைத் தலைவர் பி. ஈஸ்வரபிரியா வரவேற்றுப் பேசினார். அரசு மருத்துவமனை அதிகாரி கேஆர். மைதிலி, மருத்துவர் நாகரெத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரி துணை முதல்வர் எல். விசாலாட்சி வாழ்த்திப் பேசினார். கல்லூரியின் பல்வேறு துறைகளைச்சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் என். சுதா நன்றி கூறினார்.