சிவகங்கை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை சிவகங்கை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த அழகர் மகன் காஞ்சிவனம்(66). இவர்,அதே பகுதியில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். இவரது கரும்பு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சில மாடுகள் மேய்ந்துள்ளன. இதுகுறித்து விசாரித்த போது வாகுளத்துப்பட்டியைச் சேர்ந்த போதுராமு என்பவருடைய மாடுகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காஞ்சிவனம் வாகுளத்துப்பட்டிக்குச் சென்று போதுவனத்திடம் கேட்டுள்ளார். அதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றி போதுராமு உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து காஞ்சிவனத்தை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிவனம் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து போதுராமு(23), அவரது தந்தை மருதுபாண்டி(50), உறவினர்கள் சொக்கலிங்கம்(47), மருது(42) ஆகிய 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.