சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பன்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் யசோதமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பன்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.01.01.2017 அன்றைய நிலவரப்படி 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். கல்விச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களில் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் ஒட்டி சான்றிதழ் நகல்களை இணைத்து ரூ.5 அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் ஜூன் 23-க்குள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் துறை அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக முதல் தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.