காரைக்குடி என்சிசி மாணவிக்கு பாராட்டு

குடியரசு தினவிழா விருது பெற்றதற்காக காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

குடியரசு தினவிழா விருது பெற்றதற்காக காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய மாணவர் படையின் திருச்சி மண்டலம் சார்பில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், காரைக்குடியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் தமிழ்நாடு 9-ஆவது பட்டாலியன் என்.சி.சி. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 27 பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றனர்.  இப்பள்ளிகளின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அழகப்பா மெட்ரிக் பள்ளி என்.சி.சி. மாணவி கே. பிருந்தாவுக்கு சிறந்த தேசிய மாணவர் படை மாணவிக்கான விருதை திருச்சி மண்டல கமாண்டிங் அதிகாரி சுவாமிநாதன் வழங்கினார். மாணவியை காரைக்குடி கமாண்டிங் அதிகாரி ஜான் லூயிஸ் ராஜ், பள்ளியின் நிர்வாகத்தின், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com