சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மார்ச் 24) வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மார்ச் 24) வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை-கண்ணாயிருப்பு,காரைக்குடி-கூமாச்சிப்பட்டி,திருப்பத்தூர்-கரடிப்பட்டி,தேவகோட்டை-வசந்தனி,
காளையார்கோவில்-மரக்குளம்,மானாமதுரை-தாமரைக்குடி,திருப்புவனம்-சொக்கையன்பட்டி(ஏனாதி வடக்கு),இளையான்குடி-இளமனூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள் அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித் தொகை,பிறப்பு,இறப்பு சான்றிதழ்,வருமானச் சான்றிதழ்,இலவச வீட்டு மனைப் பட்டா,புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழுக்கு மனு மூலம் விண்ணப்பக்கலாம். அவற்றை விசாரனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com