சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டக் காவல்க் கண்காணிப்பாளர் டி.ஜெயசந்திரன் பிறப்பித்த உத்தரவை அடுத்து சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய உள்கோட்டங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்களை விசாரனை செய்தனர். கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து 210 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 170 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 34 மனுக்கள் தொடர் விசாரணையில் உள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.