ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்கு பின் அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்கு

ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்குப் பின், அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்குப் பதிந்து, சிவகங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மறைவுக்குப் பின், அவரது ஓய்வூதியப் பணத்தை எடுத்த மகன் மீது வழக்குப் பதிந்து, சிவகங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலாயூரைச் சேர்ந்தவர் சலுகைச்சாமி. இவர், வேளாண்மைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனவே, இவருக்கு மாதந்தோறும் மாவட்ட கருவூலத்தின் மூலம் ஒய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்த ஓய்வூதியப் பணத்தை, சிவகங்கையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சலுகைச்சாமி கடந்த 29-8-2015 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாராம்.
ஆனால், சலுகைச்சாமி இறந்த தகவலை அவரது குடும்பத்தினர் மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு தெரிவிக்கவில்லையாம். மேலும், அவரது மகன் உதயசங்கர் கடந்த 1-4-2016 முதல் 31-7-2016 வரை சலுகைச்சாமியின் ஒய்வூதியப் பணத்தை வங்கி ஏடிஎம் மூலமாக எடுத்து வந்துள்ளார்.
இதனிடையே, சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலர் ராமலெட்சுமி, மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சலுகைச்சாமி இறந்திருப்பதும், ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் எடுத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரித்ததில், சலுகைச்சாமி இறப்புக்கு பிறகு அவரது மகன் உதயசங்கர் தந்தையின் ஓய்வூதியப் பணம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 51 எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கருவூல அலுவலர் ராமலெட்சுமி, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார். எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவை அடுத்து, சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, உதயகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com