தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் சார்பில், இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புத் துறைக்கான பணியாளர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் சுமார் 11,206 பேர் பங்கேற்கின்றனர். இதற்காக, காரைக்குடியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையுடன் காலை 9 மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்வு நடைபெறுவதையொட்டி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சாரட்கர், சிவகங்கை எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், தேர்வுக்கு உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.