காரைக்குடியில் மே 23 இல் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் கூட்டம்

காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் ஆ. அழகப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com